01/09/2024
*"தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்."*
புலம்பல் 3:25
*ஆம். தமக்கு காத்திருக்கிறவர்களும், தம்மை தேடுகிற ஆத்துமாக்களுக்கும் கர்த்தர் நல்லவராய் இருக்கிறார்.*
இங்கு எரேமியா எருசலேமின் அழிவுக்காகவும், யூதாவின் பொல்லாத ஜனங்களுக்காகவும் புலம்புகின்ற இந்த காரியத்தில், இந்த 3ம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் இருந்து அவர் சொல்லும்போது "ஆண்டவருடைய சின்னத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்"
(புலம்பல் 3:1) என்று ஆரம்பிக்கிறார். அப்படியென்றால் தேவனின் கோபத்தினாலே ஜனங்கள் மாத்திரமல்ல, நானும் பாதிக்கப்பட்டேன் என்று. தான் பாதிக்கப்பட்டதாகவும் உணர்ந்து அந்த பாரத்தின் மிகுதியினாலே புலம்புகின்றார்.
ஜனங்கள் பாவம் செய்ததினால் தேவனுடன் இருந்த உறவு துண்டிக்கப்பட்டதால் எப்படி அழிந்தோம் என்றும், ஜனங்களின் பாவங்கள் எப்படி பாதித்தது என்றும் விவரிக்கிறார். பாவம் நிறைந்த நிலையில் தேவன் தங்களை கைவிட்டதாக ஜனங்கள் உணர்ந்தார்கள். கர்த்தர் நம்மை விடுவிப்பார் என்ற நம்பிக்கையைக் கூட ஜனங்கள் இழந்து போனார்கள். ஆனால் எரேமியா நம்பிக்கையை விடவில்லை. ஜனங்கள் கர்த்தரை தேடினால் அவர் நமக்கு இறங்குவார் என்று கூறுகிறார்.
ஜனங்கள் கர்த்தரை தேடினால் அவர் நமக்கு இறங்கி, கிருபை செய்வார்! நம்மை இரட்சிப்பார்! நமக்கு உதவுவார்! என்று சொல்கிறார்.
ஜனங்களை தண்டிப்பதன் மூலம் தேவன் சந்தோஷப்படுகிறதில்லை என்கிறார்.
அதனால் பாவத்துக்கு வரும் தண்டனை குறித்து முறையிடாமல் பாவத்திற்காக வருந்தி, நம்முடைய வழியை சோதித்து அறிந்து, கர்த்தரிடத்தில் திரும்பினால் கர்த்தர் மனம் இரங்குவார் என்று அங்கு ஜனங்களுக்கு சொல்லுகிறதை புலம்பல் 3:40 பார்க்க முடிகிறது. நம்முடைய கைகளை மாத்திரமல்ல இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனுக்கு ஏறெடுக்கக்கடவோம். என்கிறார்(புலம்பல் 3:41).
தேசத்தின் ஜனங்களுக்காக அழுகிற எரேமியாவை பார்க்க முடிகிறது(புலம்பல் 3:48,50). ஆழமான கிடங்கிலிருந்து கர்த்தாவே உம்முடைய நாமத்தை பற்றி கூப்பிட்டேன். உம்மை நோக்கி கூப்பிட்டேன் நீர் என் அருகில் வந்து பயப்படாதே என்றீர். என் பிராணனை மீட்டுக்கொண்டீர். என்கிறார். (புலம்பல் 3:55-57).
*ஆம்! கர்த்தர் நல்லவர். நாம் அவரை தேடும் போது தான் அதை புரிந்துகொள்ள முடியும். நாம் அவருக்கு காத்திருக்கும் போதுதான் அவர் நல்லவரென்பதை அறிந்து கொள்ள முடியும்.*
*ஆண்டவர் நம்மை என்றென்றைக்கும் கைவிடமாட்டார். ஒரு சில நேரங்களில் சஞ்சலங்கள் இருந்தாலும், அவர் கிருபையின்படி இறங்குவார்.*
(புலம்பல் 3:31,32)
*சஞ்சலங்கள் போராட்டங்கள் நம் வாழ்க்கையில் இருந்தாலும், நாம் இவர் இரட்சிப்புக்கு காத்திருக்க வேண்டும்.* (புலம்பல் 3:26)
*நாமும் நம்முடைய சூழ்நிலைகண்டு துவண்டு போகாமல் கர்த்தரை தேடினால், கர்த்தர் நம்மை கண்டு, நம் கூப்பிடுதலைக் கேட்டு, நமக்கு இரங்குவார். அதனால் பாவத்துக்கு வரும் தண்டனை (துன்பத்தை) குறித்து தேவனிடத்தில் முறையிடாமல், பாவத்திற்காக வருந்தி, நம்முடைய வழியை சோதித்து அறிந்து, கர்த்தரிடத்தில் திரும்பினால், நம்முடைய இருதயத்தை கர்த்தரிடத்தில் திருப்பினால், கர்த்தர் மனம் இரங்குவார். நம் சூழ்நிலையை மாற்றுவார். நம் காரியங்களை நன்மையாக மாற்றுவார். நம்மை விடுவிப்பார். நம் பயத்தை போக்குவார். சந்தோஷத்தை கொடுப்பார். நம்மை ஆசீர்வதிப்பார்.*
*"நாம் நிர்மூலமாகாதிருக்கிறதே கர்த்தருடைய கிருபை தானே!"* (புலம்பல் 3:22)
*கர்த்தர் தாமே இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் உங்களை ஆசீர்வதித்து, பாதுகாத்து நடத்துவாராக.*
💐 *HAPPY SEPTEMBER* 💐
👆- தேவதாசன் பிரேம்குமார்,
9962672124
*தேவனின் பாதத்தில் தாசர்கள்*
ஊழியர்கள் கூடுகை * இரவு ஜெபங்கள் * சுவிசேஷ ஊழியங்கள் திருமுல்லைவாயில்,
சென்னை - 62