Jayakumar Nachimuthu Jayakumar

Jayakumar Nachimuthu Jayakumar Cotton waste for bedding.

07/01/2026
07/01/2026

ஒரு வருடங்களுக்கு மேல் *வள்ளியூர்* ஊருக்குள் வராமல் *வள்ளியூர்* ஊர் மக்களுக்கு தண்ணீர் காட்டிய *திருப்பூர்* பேருந்து. இன்று (06.01.26) முதல் வள்ளியூர் ஊருக்குள் முறையாக வந்து செல்கிறது.

நேற்று (05.01.26) மாலை 5:30 மணி அளவில் ராதாபுரத்தை சேர்ந்த நீதிமன்ற பணியாளர் ஒருவர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நாகர்கோவில் செல்ல இருந்த பேருந்தில் ஏற முற்பட்ட போது இந்த பேருந்து வள்ளியூர் போகாது என என நடத்துனர் நீதிமன்ற பணியாளரை ஒருமையில் பேசி வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டிருக்கிறார். மேற்படி அந்த பேருந்து வள்ளியூர் ஊருக்குள் முறையாக வந்து செல்ல வேண்டும். இது குறித்து உள்ளாட்சி முரசு செய்தியாளர் அண்ணன் பிரேம் குமாருக்கு செல்போனில் தகவலை தெரிவித்தார். தொடர்ந்து நியூஸ் தமிழ் 24X7 செய்தியாளர் பூபதி ராஜ் &பிரேம் குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட திருப்பூர் பணிமனை கிளை மேலாளர் மற்றும் கோவை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்படி நீதிமன்ற பணியாளரை அவதூறாக பேசிய நடத்துனரை சஸ்பெண்ட் செய்வதாகவும் உறுதி அளித்தார். மேலும் பேருந்து வள்ளியூர் ஊருக்குள் வரவில்லை எனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வோம் என கூறியிருந்தோம் இதனை அடுத்து காலை மற்றும் மாலை என இரு வேளையில் வரும் இரண்டு பேருந்துகளையும் ( TN 39 N 0478, TN 39 N 0479) வள்ளியூர் ஊருக்குள் முறையாக வந்து செல்லவும் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டுகளாக *வள்ளியூர்* ஊருக்குள் வராமல் சென்ற பேருந்து இன்று முதல் மீண்டும் *வள்ளியூர்* ஊருக்குள் வந்து செல்கிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்து கழக அதிகாரிகளை அழைத்து நாகர்கோவில் முதல் திருநெல்வேலி வரை இயக்கப்படும் நடத்துனர்கள் இல்லாத 15 END TO END பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்து பேருந்துகளுமே *வள்ளியூர்* ஊருக்குள் கண்டிப்பாக வந்து செல்ல வேண்டும் என்கிற ஆணை இருந்தும் அந்த ஆணையை மீறி இந்த அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.
இன்று (06.01.26) காலை முதல் பேருந்து வள்ளியூர் ஊருக்குள் வந்து செல்கிறது. வள்ளியூர் ஊருக்குள் காலை 8.40 மணிக்கும். இரவு. 9.15 மணிக்கு வள்ளியூர் வரும்.

#வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் இந்த பேருந்தை பயன்படுத்திக் கொள்ளவும்.



ஒரு நண்பர் பகிர்ந்த பகிர்வு பதிவு.

வரும் கார்த் திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் மலை உச்சியில் தர்கா அருகே தீபத்தூ ணில் தீபம் ஏற்ற வேண்டும்.
07/01/2026

வரும் கார்த் திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் மலை உச்சியில் தர்கா அருகே தீபத்தூ ணில் தீபம் ஏற்ற வேண்டும்.

06/01/2026
06/01/2026
06/01/2026

SETC Volvo Bus: "திருச்செந்தூர் டூ சென்னை "
Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட் - ஜேம்ஸ்


வால்வோ பேருந்து :

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) அறிமுகப்படுத்தியுள்ள புதிய வோல்வோ மல்டி-ஆக்சில் பேருந்துகள், தென் மாவட்ட பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பக்காவான நேர மேலாண்மை:

திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மாலை 06:30 மணிக்குச் சரியாகப் பேருந்து புறப்பட்டது. பொதுவாக அரசுப் பேருந்துகள் தாமதமாகப் புறப்படும் என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் சரியான நேரத்தில் புறப்பட்டது.

தூத்துக்குடி வரை வாகன நெரிசல் இருந்த போதிலும் ஓட்டுநரின் சீரான வேகம் பயணிகளுக்கு நிம்மதியைத் தந்தது. தூத்துக்குடியில் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிவிட்டு (இரவு 07:59) தூத்துக்குடி சுங்கச்சாவடியைத் தாண்டியது.

இரவு உணவு நிறுத்தம்:

பெரும்பாலும் அரசு பேருந்துகள் நல்ல உணவு நிறுத்தங்களில் நிறுத்தப்படவில்லை என்கிற புகார் இருந்தது, ஆனால் இந்த முறை நல்ல உணவகத்தில் நிறுத்தப்பட்டது. இரவு உணவிற்காக 08:20 முதல் 08:42 வரை சுமார் 22 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. சரியான நேரத்தில் உணவிற்காக நிறுத்தப்பட்டது பயணிகளுக்கு வசதியாக அமைந்தது. தொடர்ந்து பயணித்த பேருந்து, இரவு 09:44 மணிக்கு அருப்புக்கோட்டையை கடந்து சென்றது.

மதுரையில் எண்ட்ரி:

மதுரை மாநகருக்குள் செல்லாமல் வெளிவட்டச் சாலை வழியாகப் பயணித்த பேருந்து, இரவு 10:40 மணிக்கு மாட்டுத்தாவணி (MIBT) பேருந்து நிலையத்திற்குள் சென்று முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றினர், அதன் பிறகு புறப்பட்ட பேருந்தானது சரியாக இரவு 11.16 மணி அளவில் மதுரை புறவழிச்சாலையை அடைந்து பயணத்தை தொடர்ந்தது.

வோல்வோவின் ஏர்-சஸ்பென்ஷன் வசதியால் மிக நிம்மதியான உறக்கம் கிடைத்தது.நள்ளிரவு 12:39 மணிக்கு பூதக்குடி சுங்கச்சாவடியையும், அதிகாலை 01:20 மணிக்கு சமயபுரத்தையும் பேருந்து கடந்தது. பயணிகளின் அயற்சியைப் போக்க உளுந்தூர்பேட்டையை தாண்டி அதிகாலை 03:20 முதல் 03:40 வரை தேநீர் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது.

சோதித்த மேல்மருவத்தூர் போக்குவரத்து நெரிசல்
அதிகாலை 04:35 மணிக்குத் திண்டிவனத்தை எட்டிய பேருந்து, 05:00 மணிக்கு ஆத்தூர் சுங்கச்சாவடியை வந்தடைந்தது. ஆனால், அதன் பிறகுதான் அந்தச் சவால் காத்திருந்தது. மேல்மருவத்தூர் கோயில் பகுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் பேருந்து சிக்கியது.

காலை 04:55 மணிக்கு ஆத்தூர் சுங்கச்சாவடியில் இருந்து மேல்மருவத்தூர் வரை கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நகர முடியாமல் தவித்தோம். ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்களின் வாகனங்கள் அதிகரித்ததே இந்த நெரிசலுக்குக் காரணமாக அமைந்தது.

12 மணி நேரத்திற்குள் கிளாம்பாக்கம்
மேல்மருவத்தூரில் ஏற்பட்ட அந்த ஒரு மணி நேரத் தாமதத்தையும் மீறி, ஓட்டுநர் பேருந்தைச் சமநிலையான வேகத்தில் இயக்கி, காலை 07:01 மணிக்குச் சென்னையின் புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கத்தை (KCBT) வந்தடைந்தது. அதே போல் பயணம் முழுக்க பேருந்தின் வேகமானது சராசரியாக 80-85 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது. ஒரு மணி நேர டிராஃபிக் மட்டும் இல்லையென்றால், இந்நேரம் காலை 6 மணிக்கே சென்னைக்குள் நுழைந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டண விவரம் (Fare Details)

தனியார் ஆம்னி பேருந்துகளில் வார இறுதி நாட்களில் ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை வசூலிக்கப்படும் நிலையில், SETC வோல்வோ பேருந்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும்போது கட்டணம் மிகவும் சிக்கனமாக உள்ளது.

ஆன்லைன் முன்பதிவு கட்டணம் ₹ 1,165

உடனடி டிக்கெட் கட்டணம் - 1115

ஒரு மணி நேர டிராஃபிக்கில் சிக்கினாலும், உரிய நேரத்திற்குப் பயணிகளைச் சேர்த்த SETC ஓட்டுநர்களின் திறமை பாராட்டத்தக்கது. சொகுசான மற்றும் வேகமான பயணத்தை விரும்புவோருக்கு இந்த வோல்வோ சேவை ஒரு சிறந்த வரப்பிரசாதம்.

06/01/2026

Address

168/99 Venkatasamy Road West RS Puram
Coimbatore
641002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jayakumar Nachimuthu Jayakumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share