Nose Rings of India மூக்குத்தி

Nose Rings of India மூக்குத்தி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nose Rings of India மூக்குத்தி, Design & Fashion, 965-Manoranjitham Illam. Big Bazaar Street, Coimbatore.

Mini Pearl and Sterling Dangle
19/11/2014

Mini Pearl and Sterling Dangle

இராஜஸ்தான் பிஷ்னோய் பழங்குடி இனப் பெண் அணிந்துள்ள நத் மூக்கு அணி
19/11/2014

இராஜஸ்தான் பிஷ்னோய் பழங்குடி இனப் பெண் அணிந்துள்ள
நத் மூக்கு அணி

மூக்குத்தட்டு அணிந்துள்ள கிராமியப்பெண் மதுரை
19/11/2014

மூக்குத்தட்டு அணிந்துள்ள கிராமியப்பெண்
மதுரை

19/11/2014

மூக்குத்திப் பாட்டு-2
--------------------------------------------------------------------------------------
சின்னச்சின்ன மூக்குத்தியாம்
--------------------------------------------------------------------------------------
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி 'பாதை தெரியுது பார்' படத்தில் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பாடல்
--------------------------------------------------------------------------------------
சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்- பொண்ணே!
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்

கழுத்தை சுத்தியோர் அட்டியலாம்
உன் கட்டழகே ஒரு பட்டியலாம்
முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும்- பேச்சு
ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்

வெத்தில போட்டா உன் வாய் செவக்கும்- கன்னம்
வெக்கத்தினாலே செவந்திருக்கும்
உழைக்கும் மேனி கருத்திருக்கும்-உன்
முகத்தில் தாமரை பூத்திருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்-பொண்ணே
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்

18/11/2014
18/11/2014
18/11/2014
18/11/2014

மூக்குத்திப் பாட்டு -1
--------------------------------
சோளச் சோளக் காட்டிலே
சோளம் அடிக்கிற வீட்டிலே
பந்தடி பந்தடி மீனாளே
பதக்குச் சோளம் நான் தாரேன்
சின்னச் சின்ன மூக்குத்தி
சித்தப்பா போட்ட மூக்குத்தி
அத்தை போட்ட மூக்குத்தி
அரைப்பணத்து மூக்குத்தி
கல்யாண வாசலிலே
கண்டெடுத்த மூக்குத்தி
சீமந்த வாசலிலே
தேடித் தந்த மூக்குத்தி

18/11/2014

முக அழகுக்கு ஏற்ற மூக்குத்தி
முகத்திற்கு அழகான வடிவத்தை தருவது மூக்குதான். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான மூக்கு அமைந்திருக்கும். மேக் அப் போடும்போது மூக்கு அழகை எடுத்துக்காட்டும் வகையில் மேக் அப் போடுவது கூடுதல் அழகை தரும் மூக்கு குத்திக்கொள்வது மூக்கு அழகையும், முக அழகையும் அதிகரிக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
மூக்குத்தி குத்திய பெண்ணின் அழகு தனிதான். பெண்கள் மூக்குத்தி அணிந்திருந்தால் அவர்களின் அழகு மிளிர்கிறது என்பார்கள். மூக்குத்தி அணிகலன் மட்டுமல்ல உடலுக்கும் நல்லது என்று கூறுகிறார்கள்.
பெண்களின் சக்தி
ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம் என்கின்றனர் முன்னோர்கள். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக்கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.
ஆரோக்கியத்திற்கு நல்லது
மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி ஒற்றைத் தலைவலி மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள் பார்வைக் கோளாறுகள் நரம்பு சம்பந்தமான நோய்கள் மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான். தங்கம்தான் அணியவேண்டும். கவரிங் அணிவதால் எந்த பலனும் இல்லை என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். இன்றைக்கும் கிராமப் புறங்களில் மூக்கு குத்திய பெண்களை காணலாம்.
அகன்ற மூக்கு
அகன்ற மூக்கு உள்ளவர்களுக்கு 5 கல் கொண்ட வட்ட மூக்குத்தி அழகை அதிகரித்துக் காட்டும். பேசரியும், மிஸியம்மா மூக்குத்தி எனப்படும் அகலமான மூக்குத்தியும் எடுப்பாய் இருக்கும். நீண்ட, சப்பை, குடமிளகாய் வடிவங்களில் உள்ள மூக்கினை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது என்றாலும் மூக்குத்தி போட்டு ஓரளவு அழகாக்கலாம். இவர்கள் சங்கு மூக்குத்தி, முத்து மூக்குத்தி போடுவதால் சப்பை மூக்கினை மாற்றிக்காட்டும். கூர்மையான நாசி கொண்டவர்கள் இடது மூக்கில் ஒற்றைக்கல் மூக்குத்தி அணிவது முக அழகை அதிகரித்துக் காட்டும்.
முகத்திற்கு ஏற்ற மூக்குத்தி
கல் இல்லாத வெறும் மூக்குத்தி எந்த முகத்துக்கும் அழகாக பொருந்தும். சிவப்பாக உள்ளவர்களுக்கு பச்சைக்கல் மூக்குத்தி எடுப்பாக இருக்கும். மாநிறம் உள்ளவர்கள் சிவப்புக்கல் மூக்குத்தி, கருப்பு நிறமானவர்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி போட்டால் அம்சமாக இருக்கும். குறுகிய, நீண்ட முகம் உள்ளவர்களுக்கு ஒரு கல் மூக்குத்தி. அகல முகம் உள்ளவர்களுக்கு கற்கள் பதித்த அகன்ற மூக்குத்தி பொருந்தும்.
இடது பக்கம்
இன்றைக்கு பேஷனுக்காக வலதுபக்கம் மூக்குத்தி அணிகின்றனர். அது தவறானது இடதுபக்கம்தான் மூக்குத்தி அணியவேண்டும் என்று சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted by: Mayura Akilan Published: Friday, March 30, 2012,

18/11/2014
18/11/2014

மூக்குத்தி அணியும் ஸ்ரீகாமுகாம்பாள்
மயிலாடுதுறைக்கு வடமேற்கிலும், திருமணஞ்சேரிக்கு வடக்கிலும் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அத்தலத்துக்கு “கிடாத்தலை மேடு’ என்று பெயர். இங்கு ஸ்ரீ காமுகாம்பாள் உடனுறை ஸ்ரீ துர்க்காபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
துர்க்கா தேவியின் சிலா விக்ரகத்தில் இடது நாசியில் மூக்குத்தி அணிவதற்காக ஒரு சிறு துவாரம் அமைந்துள்ளது. இது பற்றிய கதையொன்று, இப்பகுதியில் பரவலாகக் கூறப்படுகிறது. இந்தத் திருவுருவத்தில் மூக்குத்தி அணிவிப்பதற்கான அமைப்பை சிற்பி ஏற்படுத்தவில்லை. மிகவும் பக்தியுடைய அந்தச் சிற்பி, சிலையை வடித்து முடித்த திருப்தியில் உறங்கப் போனார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய துர்க்கை, “”நான் மூக்குத்தி அணிய வேண்டும்” என்று கேட்க, சிற்பியோ “”விக்கிரக வேலை பூர்த்தியாகிவிட்டதே தாயே! இந்த நேரத்தில் உன் நாசியில் நான் கை வைத்து அது பின்னமாகிவிட்டால் என் மனம் மட்டும் அல்லாமல் ஊர் மக்கள் மனமும் சங்கடப்படுமே! தவிர எனது இத்தனை நாள் உழைப்பும் வீணாகுமே” என்று கனவிலேயே கவலை தெரிவித்தாராம். அதற்குப் புன்னகையைப் பதிலாக்கிய அம்பிகை, “”கவலைப்படாதே! உன் பொருட்டு நானே இத்திருவிளையாடலை நிகழ்த்துவேன். மூக்குத்தி அணிய முடிவெடுத்துவிட்டேன். நாளை பார்” என்று சொல்லி மறைந்தாளாம்.
மறுநாள் காலை, இடது நாசியில் மூக்குத்தி இடுமளவு துவாரம் இருந்ததாம். இன்றும் விசேஷ தினங்களில் அம்பிகைக்கு மூக்குத்தி அணிவித்து அழகு பார்க்கின்றனர் அன்பர்கள். தனது “சாந்நித்யத்தை’ காட்ட அம்பிகை நிகழ்த்திய அருள் விளையாட்டிது.
மேலும் விழா உள்ளிட்ட சிறப்பு நாட்களில் இந்த துர்க்கையின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புவதை தரிசித்திருப்பதாக அடியார்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

Published On: Wed, Jun 18th, 2014
ஆலயங்கள் | By வாணிஸ்ரீ சிவகுமார்

18/11/2014

மூக்குத்தி என்பது மூக்கில் துளையிட்டு அணியும் ஆபரணம். இப்போது, துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன.பொதுவாக திருமணமான பெண்களே மூக்குத்தி அணிகிறார்கள். பெரும்பாலும் மூக்குத்தி உள்ளிட்ட மூக்ணிகள் தங்கத்திலேயே செய்யப்படுகின்றன.வெள்ளி, பித்தளையும் பயன்படுவதுண்டு.
வரலாறு
மூக்குத்தி பற்றி பழைய இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. சோழர்,பாண்டியர்.கால சிற்பங்கள் ஓவியங்கள் போன்றவற்றிலும் காணப்படவில்லை. பழந்தமிழகத்திலும், வடஇந்தியாவிலும் பழங்காலத்தில் மூக்குத்தி அணிந்தாக தெரியவில்லை. நிறைய அணிகலன்களுடன் காணப்படும் பஹ்ரூத் சிற்பங்களிலோ, பைரா, புத்தகயா, கவுசம்பி, குசானர்களின் சிற்பங்கள் அஜந்தா ஓவியங்களிலோ, உதயகிரி சிற்பங்களிலோ மூக்கில் அணி எதுவும் காணப்படவில்லை. 17ஆம் நூற்றாண்டுக்கு பிறகே இந்தியாவில் சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவற்றில் மூக்குத்தி காணயியலுகிறது. மதுரை மீனாட்சிக்கும்,கன்னியாகுமரியின் குமரியம்மனுக்கும் உள்ள மூக்குத்திகள் பிற்காலத்தில் அணிவிக்கப்பட்டவை என்ற கருத்து உள்ளது. மூக்குத்தி அணியும் பழக்கம் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மூக்குத்தி வகைகள்
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்ட மூக்கணிகள் பிரபலமாகவுள்ளன. நாதையா எனப்படும் வெளியில் உள்ள ஒரு வளையமும்,அத்துடன் ஒரு சங்கிலியும் இணைக்கப்பட்ட மூக்கணி ராஜஸ்தானில் செல்வாக்குடன் உள்ளது. நாத் மற்றும் நாக் அணி, ஜம்மு காஷ்மீரில் பரவியுள்ள மூக்கணி. மூக்குத்தி என்பது தமிழகத்தில் பரவலாக‍ அணியப்படுகிறது மேற்கு வங்கத்தில் புல்லாக்கு அணியப்படுகிறது. உ.பி. யில் முர்க்கிலா, எனப்படும் அணிஅணியப்படுகிறது. நாத்து, பூங்க், மூக்கு கடா ஆகியவை ஆந்திரத்தின் மூக்கணிகள். மகாராஸ்டிராவில் முத்து கோர்க்கப்பட்ட வளையமுள்ள மூக்கணியை அணிகிறார்கள். அரியானாவில் அணியப்படுவது புர்லி, கோக்கா, நாத், லாங்க் அகியவையாகும். பீகாரில் நாக்புல், சந்திரா, சொக்கி, ஜுல்னி, தோராபுல் அகிய மூக்கணிகள் அணியப்படுகின்றன ஒடிசாவின் மூக்கணிகள் ஜாரியாபுலி, கைலேகி ஆகும். இவற்றுள் விலையுயர்ந்த அல்லது சாதாரண கற்கள் பதிக்கப்படுவதுண்டு. இம்மாநில பழங்குடி மக்கள் இரு மூக்குகளிலும் இரு வளையங்களும் நடுவில் ஒன்றுமாக மூக்கணிகளை அணிகின்றனர்.
காரணமும் பயன்களும்
மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு என்கிறார்கள்.
கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும் போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புதான் மூக்குத்தி.
நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல்படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல்பட வைக்கும். இடது பக்கத்தில் மூளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்தத் துவாரத்தில் தஙக் முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்கே மூக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்கொணர்வதற்கு ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன. இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க மூக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
ta.wikipedia.org

Address

965-Manoranjitham Illam. Big Bazaar Street
Coimbatore
641001

Alerts

Be the first to know and let us send you an email when Nose Rings of India மூக்குத்தி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nose Rings of India மூக்குத்தி:

Shortcuts

Share