Dr.A.Subramaniyan Naattu Marundhu Kadai,Kallakurichi

Dr.A.Subramaniyan Naattu Marundhu Kadai,Kallakurichi Organic Products

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வரகு-முருங்கை இலை  #பொங்கல்_மிக்ஸ்: #வரகு_பயன்கள்:* சர்க்கரை அளவை குறைக்கிறது.* மூட்டுவலியை கு...
18/09/2023

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வரகு-முருங்கை இலை #பொங்கல்_மிக்ஸ்:

#வரகு_பயன்கள்:

* சர்க்கரை அளவை குறைக்கிறது.
* மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
* கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண்
நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
* நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.

#முருங்கை_இலை_பயன்கள்:

* முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

* இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருக்கிறது.

* முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

* முருங்கைக் கீரையில் ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது.

* வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் சத்துக்கள அதிகமாக உள்ளது.

* முருங்கைக் கீரையில் கேரட்டை விட 4 மட்ங்கு வைட்டமின்-ஏ அதிகமாக இருக்கிறது.

* பாலை விட 4 மடங்கு கால்சியம் முருங்கை கீரையில் நிறைந்துள்ளது.

| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

   ஆவாரம்பூ சங்க காலம் முதலே பயன்படுத்தி வந்த பூ ஆகும் இதனை மடல் ம ஏறி வந்த தலைவன் சூடிக்கொண்டு வந்து தலைவனை கரம்பிடிக்க...
09/09/2023


ஆவாரம்பூ சங்க காலம் முதலே பயன்படுத்தி வந்த பூ ஆகும் இதனை மடல் ம ஏறி வந்த தலைவன் சூடிக்கொண்டு வந்து தலைவனை கரம்பிடிக்க வருவதாக கூறப்படுகிறது.

குறிஞ்சிபாட்டில் 99 வகையான மலர்களில் அவரம்பூவும் ஒன்று.

ஆவாரை பூத்திருக்கச் சாவாரை காண்பது உண்டா? என்று பழமொழியும் உண்டு

ஆவாரம்பூ, அதன் சமூலம் அனைத்தும் உடலுக்கு பல வகையான நன்மைகளை அளிக்கவல்லது. தோல் நோய்களில் இருந்து சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் மேல்பூச்சாகவும், உட்கொள்ளவும் பயன்படுகிறது.

| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் ...
12/07/2023

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:

1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.

2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.

3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.

4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.

6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.

7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.

8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.

For orders:https://dharaniherbbals.in/product.../turkey-berry-thokku

| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:உடல் சூடு குறையும்…முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…முகச்சுருக...
30/06/2023

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:
உடல் சூடு குறையும்…
முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…
முகச்சுருக்கம் சரியாகும்…
தோல் மென்மையாகும்…
கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது…
| | | |

 #மூலிகைகளின்_ராணி-  #துளசி‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இல...
21/06/2023

#மூலிகைகளின்_ராணி- #துளசி

‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். உலர வைத்து பவுடராக தயாரித்தும் பயன்படுத்தலாம். காபி, டீக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கிரீன் டீ தயாரிப்புகளில் துளசி பிரதானமாக இடம்பிடித்துவிட்டது.

துளசியை பிரதானமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுவாச கோளாறு பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி டீ பருகி வரலாம். இது சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

மன அழுத்தம் தோன்றுவதற்கு காரணமான கார்டிசால் ஹார்மோன் அளவை சீராக பராமரிப்பதற்கு துளசி டீ பருகுவது நல்லது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

துளசி டீ பருகும்போது கார்டிசால் அளவு குறைகிறது. இதனால் மன அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. மேலும் மன நலன் சார்ந்த வேறு பல அறிகுறிகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதிலும் துளசி டீ முக்கிய பங்கு வகிக்கிறது.

பற்களின் ஆரோக்கியம் காப்பதிலும் துளசி டீயின் பங்களிப்பு இருக்கிறது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து பற்களையும், நுண்ணுயிரி கிருமிகளிடம் இருந்து வாய் பகுதியையும் பாதுகாக்க உதவுகிறது. வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.

கை, கால்களின் மூட்டு இணைப்பு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதற்கு துளசி எண்ணெய்யை பயன்படுத்தலாம். செரிமான கோளாறு பிரச்சினைகளை சரிசெய்யவும் துணை புரிகிறது.

துளசி டீயை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து பருகலாம். வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் நான்கு, ஐந்து துளசி இலைகளை போட்டு கொதிக்கவைக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி டம்ளரில் ஊற்ற வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். இதேபோல் துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய், இஞ்சி சேர்த்தும் ருசிக்கலாம்.

| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

க்ரீன் டீ(GREEN TEA) ☕️:🔹க்ரீன் டீ (GREEN TEA) பரவலாக அனைவரும் அறிந்த ஒரு பானமாகும்.🔹இது சூடாக அல்லது குளிர்ச்சியாக எப்ப...
08/05/2023

க்ரீன் டீ(GREEN TEA) ☕️:
🔹க்ரீன் டீ (GREEN TEA) பரவலாக அனைவரும் அறிந்த ஒரு பானமாகும்.
🔹இது சூடாக அல்லது குளிர்ச்சியாக எப்படி வேண்டுமானாலும் அருந்த கூடிய பானமாக உள்ளது.
🔹க்ரீன் டீ உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
🔹ஹெல்த்லைன் (Healthline)என்ற தளம் க்ரீன் டீ குறித்து கூறும்போது பூமியில் உள்ள சிறந்த ஆரோக்கியமான பானம் க்ரீன் டீ என கூறியது.
🔹ஏனெனில் இது உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளன.
🔹சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை குடிப்பதற்கு பதிலாக தேநீர் குடிப்பது மூலம் கோடை காலத்தில் நமது உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள முடியும்.
For orders: https://dharaniherbbals.in/produ.../premium--green-tea-75-gm

 #உளுந்தங்கஞ்சி_நன்மைகள்முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.தோல் சுருங்காதுகண்களுக்கு ஆரோக்கியம்எலும்புகள் தேயாதுப...
06/05/2023

#உளுந்தங்கஞ்சி_நன்மைகள்
முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.
தோல் சுருங்காது
கண்களுக்கு ஆரோக்கியம்
எலும்புகள் தேயாது
பெண்களின் கர்ப்பப்பை வலுபெறும்.

|
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாகும்.சுவாச கோளாறு...
25/04/2023

பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாகும்.
சுவாச கோளாறுகள் நீங்கும்.
கல்லீரலை பலப்படுத்தும்.

செய்முறை
400ml தண்ணீரில் 10 கிராம் பொடியை கலக்கி 200மேல் ஆகா சுண்ட காய்ச்ச வேண்டும்

உபயோகிக்கும் முறை
பெரியவர்களுக்கு 100ml
7 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50ml
7 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 30ml

| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் பொலிவு தரக்கூடியது  #ரெட்ஒயின், #தரணிஹெர்பல்ஸ்-யின்  #ரெட்ஒயின்ஜெல்ரெட்...
19/04/2023

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் பொலிவு தரக்கூடியது #ரெட்ஒயின்,

#தரணிஹெர்பல்ஸ்-யின் #ரெட்ஒயின்ஜெல்
ரெட் ஒயின் ஜெல் தொடர்ந்து பயன்படுத்தினால்
முகப்பருக்கள் எளிதில் குணமாகும்.
மேலும் இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்,
இறந்தசெல்கள் ஆகியவற்றை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்.

தோல்நிறத்தை மேம்படுத்துகிறது, அதை மென்மையாகவும்,மிருதுவாகவும் மாற்றுகிறது.
இளமைபொலிவைச் சேர்கிறது மற்றும் மந்தமான சருமத்தைப் புதுப்பிக்க உதவுகிறது.

நேர்த்தியான கோடுகளை குறைக்கிறது, சுருக்கங்கள் மற்றும் தோல் செல்களை இறுக்க உதவுகிறது.

| | See less

"முயற்சி" - ஒவ்வொருவரும் ஒரு சிறிய முயற்சியினை வாழ்க்கையில் எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் ,அதன் முடிவில் வெற்றியோ தோல்...
17/04/2023

"முயற்சி" - ஒவ்வொருவரும் ஒரு சிறிய முயற்சியினை வாழ்க்கையில் எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் ,அதன் முடிவில் வெற்றியோ தோல்வியோ நிச்சயம் கிடைக்கும் ,வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி தான் , ஆனால் தோல்வியை தழுவினால் மனம் தளரவிடாமல் முயற்சியை வேறு விதமாக எடுக்க வேண்டும் கண்டிப்பாக முயற்சிக்கான பலன் கிடைக்கும்.

| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் ...
11/03/2023

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.

இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும்  #ஆவாரம்பூ_டீ  #பயன்கள்: #மலச்சிக்கல்:மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ...
08/03/2023

இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும் #ஆவாரம்பூ_டீ #பயன்கள்:
#மலச்சிக்கல்:
மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது.
மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.
#சருமத்தொற்றுகளுக்கு:
நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரி செய்ய வேண்டுமென்றால், ஆவாரம்பூ டீ செய்து உள் மருந்தாக குடிக்கலாம்.
#சிறுநீர்த்தொற்று:
ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள் குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.
காய்ச்சலுக்கு:
அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம் பூ டீ (avarampoo tea) தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.
#நீரிழிவுநோய்:
இப்போதேல்லாம் பலர் சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும்.
இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
#வயிற்றுப்புண் குணமாக:
காய வைத்து பொடி செய்த ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனையையும் இந்த ஆவாரம்பூ டீ (avarampoo tea) குணப்படுத்திவிடும்.
For Order : www.dharaniherbbals.in

Address

Kallakurichi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.A.Subramaniyan Naattu Marundhu Kadai,Kallakurichi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share